ஆந்திர என்கவுண்டர்: பலியான 20 பேரில் 9 உடல்கள் தகனம்
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களில் 9 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 6ம் தேதி செம்மரங்கட்டைகளைக் கடத்தியதாக திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். பலியானவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு தமிழகம் கொண்டு வரப்பட்டது. அதில். 15 பேரின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் அரசநத்தம், அத்திமரத்துவழவு, கருத்தம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 7 பேரின் உடல்களை உறவினர்கள் தகனம் செய்தனர். உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் வேறு வழியின்றி தகனம் செய்ய நேரிட்டதாக அவர்கள் கூறினர்.
இதேபோல் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, உடனடியாக தகனம் செய்யப்பட்டது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் பாலசமூத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரது உடலும் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications