கூத்தாண்டவர் கோவில் திருவிழா.. 'மிஸ் கூவாகம்' பட்டம் வென்றார் சென்னை ஆண்ட்ரியா!
விழப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் சென்னைய சேர்ந்த ஆண்ட்ரியா முதலிடம் பிடித்தார்.
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர். இதில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா "மிஸ் கூவாகம்' பட்டம் வென்றார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 25 ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவையொட்டி மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூவாகத்துக்கு திருநங்கைகள் வந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழாவின் ஒருபகுதியாக நேற்று மிஸ் கூவாகம் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். விதவிதமாக ஆடை, நகைகள் அணிந்து வந்த திருநங்கைகள் நடனம், நடை, உடை, பாவனையுடன் திறனை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆண்ட்ரியா மிஸ் கூவாகம் பட்டத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து சேலம் கவி இரண்டாம் இடத்தையும், மதுரை வர்ணிதா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இளம் சாதனையாளர் விருது பானுவுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு, கிரீடம் சூட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications