தேனி வனப்பகுதியில் வேட்டையாடிய இருவர் கைது - வீடியோ
தேனி வனப்பகுதியில் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி: தேனி வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் தேனி வனப்பகுதியில் அடிக்கடி சிலர் வேட்டையாடி வந்துள்ளனர். இவர்களை வனத்துறையினர் பல நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் தேனி வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் வேட்டையாடுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் வேட்டியாடிய காளை மற்றும் முருகன் என இருவரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் வேட்டையாடிய விலங்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காடுகளில் சிலர் தொடர்ந்து சில விலங்குகளை குறிவைத்து வேட்டையாடி அவற்றை விபாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இது பெரும் வணிகமாகவே நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications