வறட்சி: தொடர்ந்து எரியும் காட்டுத் தீ- கிராமங்களுக்குள் ஊடுருவும் வனவிலங்குகள்- விவசாயிகள் அதிர்ச்சி
நெல்லை: வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி வனப்பகுதியில் தீ விபத்து அடிக்கடி நிகழ்கிறது. இதனால் மலைகளில் இருந்து ஊர்களுக்குள் வனவிலங்குகள் நுழைந்துவிடுவதால் நெல்லை மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக- கேரளா எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் புளியங்குடி, புளியரை, மேக்கரை, வடகரை, குண்டாறு, குற்றாலம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அரியவகை வன விலங்குகள், உயிரினங்கள், அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் ஏராளமாக உள்ளன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இத்தீவிபத்தால் வன விலங்குகள் காட்டு பகுதியில் இருந்து ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள புளியரை பகவதிபுரம், உக்கடம், வடகரை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை, மா, பலா, பாக்கு மரங்களை சேதபடுத்தி வருகின்றன.
இது குறித்து அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் செய்தும், தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வன விலங்குகளை விரட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications