அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்- உண்மையை மறைக்கும் திமுக- மதுரை டூ சென்னை பாஜக மகளிரணி நீதிப் பேரணி!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைக்க முயலும் ஆளும் திமுகவைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும் பாஜகவின் மகளிரணியினர் மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப் பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னையில் பேரணி நிறைவடையும் போது ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக மகளிரணியினர் மனு வழங்குவர் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநரைச் சந்தித்து பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்

அண்ணா பல்கலை. மாணவி- அதிமுக, தவெக, நாம் தமிழர் போராட்டங்கள்
அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார விவகாரத்தில் உண்மையை மறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அண்ணா திமுகவினர் நேற்றும் இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேற்று கைப்பட எழுதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்திருந்தார். நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையை துண்டு பிரசுரங்களாக விநியோகித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதேபோல சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது பாஜகவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக நீதிப் பேரணியை அறிவித்துள்ளது.
-
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக்











Click it and Unblock the Notifications