”அண்ணா பல்கலைகழகத்தின் “டான்செட்” தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது”
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் எம்.சி.ஏ மற்றும் எம்.ஈ படிப்புகளுக்கான "டான்செட்" தேர்வை இன்றும் ,நாளையும் 96,517 பேர் எழுதுகின்றனர்.
எம்.சி.ஏ, எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு "டான்செட்" இன்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வை தமிழகம் முழுவதிலும் 96,517 பேர் எழுதுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள எம்.சி.ஏ., எம்.பி.ஏ. மற்றும் பொறியியல் முதுநிலை படிப்புகளிலும், சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான முதுநிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்காக டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் வருடாவருடம் நடத்துகிறது.
2014-15 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவுத் தேர்வு எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு இன்றும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளையும் தமிழகம் முழுவதும் 88 மையங்களில் நடத்தப்படுகிறது.
எம்.சி.. படிப்புக்கு 13,817 பேர், எம்.பி.ஏ. படிப்புக்கு 32,684 பேர், பொறியியல் முதுநிலை படிப்புக்கு 50,016 பேர் என மொத்தம் 96,517 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.












Click it and Unblock the Notifications