For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனம்: ஏப்ரல் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்யும் விவகாரத்தில் தேடல் குழுவுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு

    சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்யும் விவகாரத்தில் தேடல் குழுவுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த, ராஜாராமின் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக, துணைவேந்தரை நியமிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருகிறது. இதற்காக 3 தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Anna University VC appointment: VC Search committee gets extension up to April 30

    இதில் கடைசி 3ஆவது தேடல் குழு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. பொதுவாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர்களில் 3 பேரை தேர்வு செய்துஆளுநர் மாளிகைக்கு அந்த குழுவானது அனுப்பி வைக்கும். அந்த 3 பேரில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்தார்.

    இந்தக் குழு, புதிய துணைவேந்தர் பதவிக்கு, ஆறு பேர் பட்டியலை தயாரித்துள்ளது. அதிலிருந்து 3 பேரை பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இவர்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரை துணைவேந்தராக நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    Anna University VC appointment: VC Search committe gets extension upto April 30.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X