For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் போலீசார் நடத்திய விபச்சார ரெய்டில் நடிகை திவ்ய ஸ்ரீ கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றொரு முன்னணி நடிகை ஆந்திராவில் விபச்சார வழக்கில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் சந்தாமாமா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு சமீபத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

Another actress caught in prostitution

இந்த நிலையில் விபசார வழக்கில் நடிகை திவ்ய ஸ்ரீ ஆந்திராவில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். திவ்யஸ்ரீ தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அங்கு திவ்யஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.

அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சிறு வேடங்களில் நடித்து வருகிறார்கள். முன்னணி ஹீரோயின் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

English summary
Divya Sri one more Telugu actress caught in prostitution in Guntur. Police busted the sex racket in guntur and caught the actress Divya Sri, actors Pavan and chandu. She acted in the film B-Tech Babu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X