டிடிவி தினகரனுடன் மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு!
சென்னை அடையாறில் உள்ள வீட்டில் டிடிவி தினகரனை மொடக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவசுப்ரமணியம் சந்தித்து சென்றுள்ளார்.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்ரமணியம் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் டெல்லி திஹார் சிறையில் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தார். சிறையில் இருந்து வெளி வந்தவரை அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்த தினகரன் அதிமுக அணிகள் இணைகிறதா என்பதை 60 நாட்கள் பொருத்திருந்து பார்க்கப்போவதாகக் கூறினார். மேலும் ஆகஸ்ட்டு மாதம் முதல் வாரத்தில் தன்னுடைய தீவிர அரசியல் தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே 34 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மொடக்குறிச்சி எம்எல்ஏவும் இன்று தினகரனை சந்தித்துள்ளார். அடையாறில் உள்ள வீட்டில் தினகரனை சந்தித்து மொடக்குறிச்சி எம்எல்ஏ சிவசுப்ரமணியம் ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது












Click it and Unblock the Notifications