தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கும்பல் ஊடுருவி உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கும்பல் ஊடுருவி உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

நாகர்கோவில் : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். உரிய நீதி விசாரணை அதில் நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், சிலர் திட்டமிட்டு அவர் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.
பேராசிரியை நிர்மலாதேவியின் பேச்சில் இருந்தே அவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் தவறான முறையில் பேசி வருவது தெரிகிறது. ஆனால், அதற்கு ஆளுநரை குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
தமிழகத்தில் அரசியல் கட்சியினரை தவறாக சித்தரிக்கும் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இணையதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதே காரணம்.
காவிரி பிரச்னை இன்று நேற்றைய பிரச்னை இல்லை. கடந்த 150 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதில் 100 நாட்களுக்குள் தீர்வு வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications