ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது... அப்பல்லோ செவிலியர் அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதா எந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பதே எங்களுக்கு தெரியாது என்று செவிலியர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா எந்த நோய்க்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றே எனக்கு தெரியாது என்று செவிலியர் பிரேமா ஆண்டனி அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.
உடல்நிலை பாதிப்படைந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மரணமடைந்தார்.
இவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் இதுவரை ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் நளினி மற்றும் நர்ஸ் பிரேமா ஆண்டனிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

நீதிபதி விசாரணை
அதன்படி நேற்று இருவரும் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார். இதுமட்டுமில்லாமல் ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்த சாரதி, நிரஞ்சன்ஆகியோர் இருவரிடமும் குறுக்கு விசாரணை செய்தனர்.

எந்த சிகிச்சை
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிறப்பு வார்டில் பணியில் இருந்த செவிலியர்களை கண்காணிக்கும் பணியை பிரேமா மேற்கொண்டு வந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஜெயலலிதாவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து வழங்கப்படுகிறதா?, எந்தெந்த நேரத்தில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற மருத்துவக்குறிப்பு சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

மருத்துவக் குறிப்புகள்
விசாரணையில் நர்ஸ் பிரேமா கூறுகையில் ஜெயலலிதா என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது என்றார். இதை கேட்ட ஆறுமுகசாமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருந்து, சிகிச்சைக்கான மருத்துவக் குறிப்புகளை கண்காணித்து வந்த உங்களுக்கு அவர் என்ன நோய்க்காக அனுமதிக்கப்பட்டார், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பது எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

வெறுப்பா
குறிப்பிட்ட மருந்து எந்த நோய்க்கு வழங்கப்படுகிறது என்று தெரிந்தால்தானே நீங்கள் மற்ற செவிலியர்களை எப்படி கண்காணிக்க முடியும் என்று கேட்டதற்கு நோய் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்றார். அவ்வாறு தெரிந்து கொள்ளாததற்கு ஜெயலலிதா மீது உங்களுக்கு வெறுப்பா என்று கேட்டபோது அதெல்லாம் இல்லை என்றார்.

மீண்டும் விசாரணை
இந்த பதில்களை பிரேமாவே தருகிறாரா அல்லது அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு அளித்த பதிலா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நர்ஸ் பிரேமாவிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications