மதுரை நீதிமன்றத்தில் லிங்காவுக்கு தடை கேட்டு மீண்டும் மனு.. ரஜினி, ரவிக்குமாருக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: லிங்கா படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார் உதவி இயக்குநர் ரவிரத்தினம்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘‘லிங்கா'' படத்துக்கு தடை கேட்டு மதுரை நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து ஏற்கெனவ் உத்தரவிட்டிருந்தார்.

Appaeal against Lingaa - Notice to Rajini, KS Ravikumar

இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அப்பீல் மனு செய்துள்ளனர்.

அதில், ரஜினிகாந்த், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் முரண்பாடுகள் உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், பட தயாரிப்பாளர் வெங்கடேஷ், இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

வழக்கை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+