Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: ''முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், 'வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்படும்' என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இவ்விருது தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகை ரூ.1 லட்சத்துடன் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

இதன்படி, 2013 ஆம் ஆண்டிற்கான விருது எதிர்வரும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று (14.4.2014) வழங்கப்படவுள்ளது. போட்டிக்குரிய மென்பொருள்கள் 2010, 2011, 2012-ம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது'- 2013ஆம் ஆண்டுக்கான விண்ணப்பம், விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை -600008 என்ற முகவரிக்கு 31.12.2013க்குள் அனுப்ப வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+