கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் வெளியிடப் பட்டுள்ளது.
இதன்படி, தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன் பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, ஒவ்வொரு ஆண்டும் முதல் அமைச்சரால் சுதந்திர தினவிழாவின்போது வழங்கப்படுகிறது.
ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும், ஒரு பதக்கமும் இந்த விருதில் அடங்குகின்றன. துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இந்த விருதினை பெற தகுதியுள்ளவர்.
இந்த ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பிவைக்கப்பட வேண்டும். விருது பெற தகுதியுள்ளவர், இதற்கென்று அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவார்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications