துரைமுருகன் அண்ணா! கருணாநிதியே உங்கள் கனவில் வருவார்! ஜெகத்ரட்சகன் குறித்து சொல்வார்.. பாமக பாலு
ஆற்காடு: துரைமுருகன் அண்ணா! "ஜெகத்ரட்சகனால் கட்சிக்கு கெட்ட பெயர் என முன்னாள் முதல்வர் கருணாநிதியே உங்கள் கனவில் வந்து சொல்வார் . பாலுவுக்கு உதவி செய்" என்று கூறுவார் என அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உப்புப்பேட்டை , சின்னதக்கை, சாம்பசிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பு பேட்டை , சின்னதக்கை , சாம்பசிவபுரம் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடையே மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் பாலு, மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமையவும்,
என்னை வெற்றி பெறச் செய்தால் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருந்து இந்த தொகுதியை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கொண்டு செல்வேன்.
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு வேளாண்மை கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி கொண்டு வர முயற்சிப்பேன். சாராய ஆலை வைத்திருப்பவரை தோற்கடிக்க மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
மூன்று முறை எம்பியாக இருந்த ஜெகத்ரட்சகன், தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என கூறி அவரை திமுகவினரே பல இடங்களில் ஊருக்குள் விடவில்லை. தொகுதியை வளர்ச்சி பணிக்கு கொண்டு வர மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அது போல் நேற்றைய தினம் பாமக வேட்பாளர் பாலு, லாலாபேட்டையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் , அமைச்சர் துரைமுருகன் அண்ணா, இந்த தொகுதி மக்களுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை. உங்கள் கட்சியை சேர்ந்த அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகரட்சகனை எதுவும் கேள்வி கேட்க முடியவில்லைய
நீங்கள் பொதுப் பணித் துறை அமைச்சராகவும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி , அண்ணா அருகே இருந்தவர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை வெற்றி பெற செய்த மக்களுக்கு என்ன செய்தீர்கள். இந்த ஊர் பிரச்சினைகளை பற்றி பேசலாம். நீங்கள் வாங்க அண்ணா! கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகே மெரினாவில் அடக்கம் செய்ய உதவி செய்தது.
எனவே இந்த நேரத்தில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், "காலமான கருணாநிதி உங்கள் கனவில் வந்து, பாலுவுக்கு உதவி செய். ஜெகத்ரட்சகனால் நம் கட்சிக்குத்தான் கெட்ட பெயர்" என்றுதான் சொல்வார். ஜெகத்ரட்சகனால் லாலாப்பேட்டையில் குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி பிரச்சினைகள் எல்லாம் தீரக்கப்படாமலேயே இருக்கிறது. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மதுபான கடைகளை மூடுவேன். தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என பாமக வேட்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications