கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு: 2வது நாளாக அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக அறந்தாங்கி அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக அறந்தாங்கி அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் கதிராமங்லத்தில் ஓஎன்ஜிசி திட்டத்துக்கு எதிராகவும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இருநேரக் கல்லூரி மாணவர்களும் இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications