நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு: அறந்தாங்கி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Aranthangi govt college students protest for supporting Neduvasal and Kathiramangalam Villagers

இந்நிலையில் அந்த இரு கிராம மக்களுக்கு ஆதரவாக அறந்தாங்கி அரசுக்கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+