அரவக்குறிச்சி தேர்தல்… கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல்.. எ.வ. வேலு தகவல்
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
கரூர்: அரவக்குறிச்சியில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்று எம்எல்ஏ எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட முறையே கே.சி.பழனிச்சாமி, அஞ்சுகம், டாக்டர் சரவணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் இந்த மூன்று தொகுதிகளிலும் தொடங்கியது. இதனையடுத்து, திமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கூறியுள்ளார்.
மேலும், வரும் 30ம் தேதி தேர்தல் பணிமனையை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் திறந்து வைப்பார் என்றும் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரத்திற்கு மு.க. ஸ்டாலின் வர உள்ளார் என்றும் வேலு தெரிவித்தார்.
முன்னதாக, கே.சி. பழனிச்சாமி போட்டியிடும் தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, இங்கு நடைபெற வேண்டிய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications