அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் 13 ம் தேதி தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதாக காரணம்கூறி, தேர்தலை ஒத்திவைத்தது, தேர்தல் ஆணையம். இதன்படி வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஜூன் 13 ஆம் தேதி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எப்போது எண்ணப்படும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் வரும் ஜூன் 20 ஆம் தேதிக்கு முன் முடிவடையும் என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.