அப்போலோ மருத்துவமனையில் பரபர.. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் அதிரடி ஆய்வு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது.
ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக அரசால் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
விசாரணை நடக்கிறது
இந்த நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. அதன்பின் இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை துரிதபடுத்தி இருக்கிறது. வரிசையாக நிறைய நபர்களிடம் விசாரித்து வருகிறது.
நேற்று அதிரடி
நேற்று அதிரடியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆறு பேர் கொண்ட குழு சென்று விசாரணை நடத்தியது. மருத்துவமனை வளாகம் முழுக்க 10 இடங்களில் சோதனை நடத்தி விசாரணை செய்தனர்.
என்ன சிகிச்சை
இதில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று விசாரிக்கப்பட்டது. அதேபோல் அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் விசாரணை நடந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஆகியோரிடமும் நேற்று விசாரணை நடந்தது. மேலும் ஜெயலலிதா எம்பாமிங் செய்யப்பட்ட அறை, மருத்துவ குழு தங்கி இருந்த அறை,, அமைச்சர்கள், சசிகலா தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தினார்கள்.
அந்த அறை
அதேபோல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆய்வு நடந்தது. 2008ஆம் எண் அறையில் ஆய்வு நடந்தது. இந்த அறையில் அவர் சிகிச்சை பெறும் வீடியோதான் சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் ஆதரவாளரால் வெளியிடப்பட்டது. இங்கும் ஆய்வு நடந்தது.