மீண்டும் "வெயில்".. காணாமல் போய் திரும்பி வந்த காதலியைக் கண்ட காதலன் மன நிலையில் சென்னை!
சென்னை: சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வானம் மிகத் தெளிவாக காணப்படுகிறது. வழக்கமான சுள்ளென்ற வெயிலும் திரும்பியுள்ளது. இதனால் தண்ணீரில் மிதந்து மிதந்து சலித்துப் போய் விட்ட மக்கள் பெரும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
எவ்வளவு வெயில் அடித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனம் படைத்தவர்கள் சென்னை மக்கள். நீ எவ்வளவு வேணுமனாலும் அடிச்சிக்கோ, நாங்க அசர மாட்டோம் என்று தெம்பாக நிற்பார்கள்.
ஆனால் மழை பெய்தால்தான் சென்னைக்கு சிக்கலாகி விடும். ஓவராக மழை பெய்தால், ஊர் தாங்காது, மக்கள் தாங்க மாட்டார்கள். இது வரலாறு.

தீபாவளிக்கு முதல் நாள் முதல்
தீபாவளிக்கு முதல் நாள் சென்னையில் செமையாக மழை பெய்தது. அடுத்து ஒரு நாள் கேப் விட்டது. அதன் பிறகு பிடித்தது பாருங்கள் அடை மழை.. நேற்று முன்தினம் இரவு வரை விடாமல் வெளுத்தெடுத்து விட்டது, விட்டு விட்டு.

வெள்ளக்காடான தலைநகரம்
இந்தத் தொடர் மழையால் தமிழகத்தின் தலைநகரம் தண்ணீர் நகரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர்தான். மக்கள் நனைந்து நனைந்து ஊறிப் போய் விட்டார்கள்.

மழை நின்றது
தற்போது மழை நின்று விட்டது. நேற்று காலை முதல் மழை இல்லை. சென்னை நகரிலும் தேங்கிய நீர் வடியத் தொடங்கி விட்டது. நேற்று காலை முதலே மெதுவாக வெயில் அடிக்கத் தொடங்கியது.

பளிச் வானம்
இன்று காலை முதல் வானம் படு தெளிவாக காணப்படுகிறது. சுள்ளென்று வெயிலும் அடிக்கிறது. இதனால் சென்னை மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இத்தனை நாளாக காணாமல் போயிருந்த சூரியனைப் பார்த்தும், காணாமல் போய் திரும்பி வந்த காதலியைக் கண்ட காதலனின் நிலையில் உள்ளனர் சென்னை மக்கள்.

சுறுசுறுப்பு
ஊரே வழக்கமான சுறுசுறுப்புக்குத் திரும்பியுள்ளது. இன்று கார்த்திகை திருவிழா வேறு. இதனால் சென்னை மக்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதிலும், துணிகளைத் துவைத்துக் காயப்போடுவது என்றும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றன. அலுவலகம் செல்வோரும் நிம்மதியாக செல்வதைக் காண முடிந்தது.

போக்குவரத்து நெருக்கடி இல்லை
இன்று சென்னை நகரில் பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. வாகன ஓட்டிகள் சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் செல்லும் நிலை உள்ளது. தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிகளில் மட்டுமே சற்று சிக்கல் காணப்படுகிறது.

இவங்களும் உற்சாகத்தில்
மழை முடிந்தும் கூட இன்று எக்ஸ்ட்ரா லீவு கிடைத்த உற்சாகத்தில் பள்ளி மாணவர்களும் ஜாலியாக காணப்படுகின்றனர். இருப்பினும் நாளை முதல் மறுபடியும் ஸ்கூல் போகனுமே என்ற லைட்டான எரிச்சலையும் அவர்களிடம் காண முடிகிறது. இன்று இரவுக்கு மேல் மழை பெய்தால் நல்லாயிருக்கும் என்ற "பிரார்த்தனை"யிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்!
மொத்தத்தில் இந்த வெயில் சென்னை மக்களை சுற்று புன்னகைக்க வைத்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications