எம்மாடியோவ்... திருச்சி விமான நிலையத்தில் 6 பயணிகளிடம் 1,390 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி : விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து 1,390 தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் கடத்தப்படுவது குறித்தும், இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளதையடுத்து, விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தென் மாநிலங்களில் சென்னை, திருச்சி விமான நிலையங்கள் மூலம் தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ஆறு பயணிகளிடம் இருந்து 1,390 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து 1,390 கிலோ தங்கம் கடத்தி வந்த 6 பயணிகளிடம் திருச்சி நுண்ணறிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.