பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உட்பட 19 பேருக்கு ஜன.12 வரை ஜெயில்!!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட சென்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட அக்கட்சி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உட்பட 19 பேரை ஜனவரி 12-ந் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது விஜயகாந்த் திடீரென தன்னிலை மறந்து ....த்தூ... என காறி துப்பினார். இது மிகக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயகாந்த்தின் இந்த அநாகரிக செயலைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டை முற்றுகையிடவும் பத்திரிகையாளர்கள் திரண்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்ளிட்ட அக்கட்சி குண்டர்கள் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் பல பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து பார்த்தசாரதி எம்.எல்.ஏ. உள்பட 19 தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அனைவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பார்த்தசாரதி உள்பட 19 பேரையும் வரும் 12-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications