என் கணவர் உயிருக்கு ஆபத்து.. அட்டாக் பாண்டி மனைவி தயாள் பரபரப்பு குற்றச்சாட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அட்டாக் பாண்டியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை சிறை வார்டில் சிகிச்சை பெற்றுவரும் அட்டாக் பாண்டியின் உயிருக்கு ஆபத்து. உள்ளதாக மனைவி தயாள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அட்டாக் பாண்டி மஞ்சள் காமாலை, நுரையீரல் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல் நிலையை காரணம் காட்டி மேல்சிகிச்சைக்கு சிறை மருத்துவமனை நிர்வாகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது.

இதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய கூறியதை தொடர்ந்து அவர் சிறை கைதிகள் சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அட்டாக் பாண்டியின் மனைவி தயாள், தனது கணவருக்கு அவசர அறுவை சிகிச்சை பற்றி முழுமையான தகவல் தரப்படவில்லை என்றும், அறுவை சிகிச்சை என்ற பெயரில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அட்டாக் பாண்டிக்கு சிறையில் மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து இருக்கலாம் என எங்களது மருத்துவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே அவசர அறுவை சிகிச்சை எதற்காக என்பதையும், சிகிச்சை முறை குறித்தும் உண்மையை தெரிவிக்க வேண்டும். மேலும் எங்களின் விருப்பத்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications