போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புழல் சிறைக்கு மாற்றம்
சென்னை: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று குற்றவாளிகளும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகரான ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் மேலும் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸ் பக்ரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் மூவரும் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இவர்களை அடிக்கடி அழைத்து வருவதில் சிரமம் இருப்பதாலும், பாதுகாப்பு கருதியும் இவர்களை புழல் சிறைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை ஏ.டி.ஜி.பி திரிபாதி இவர்கள் மூவரையும் புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இன்று மூன்று பேரும் வேலூரிலிருந்து புழல் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.