ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பன்னா இஸ்மாயில் கைது!

இந்து முன்னணி, பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை வழக்குகளில் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக்கை தேடி வருகின்றனர்.
வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், பரமகுடி முருகன் ஆகியோர் கொலை வழக்கில் பக்ருதீன், மாலிக்கை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர்.
இந்த நிலையில் மதுரை திடீர்நகர் பால்காரர் சுரேஷ் கொலை வழக்கில் நேற்று வேலூர் சிறையில் இருந்த பக்ருதீன், மாலிக் இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை ஜே.எம். 4வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை வழக்கில் பன்னா இஸ்மாயிலை சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது வெள்ளையப்பனை கொலை செய்தது புத்தூர் வீட்டில் இன்ஸ்பெக்டர் லெட்சுமணனை தாக்கியது எப்படி என்பது பற்றி நடித்து காட்டினான். அவனிடமிருந்து பல ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்நிலையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பன்னா இஸ்மாயிலை சிபிசிஐடி காவல்துறையினர்கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆஜர்படுத்த அவரை சேலம் வடக்கு குற்றப்பிரிவு உதவி ஆணையர் அசோகன் தலைமையிலான காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் இன்று அழைத்து சென்றனர்.
சேலம் ஜே.எம்.4வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பன்னா இஸ்மாயிலை காவலில் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் மனுதாக்கல் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications