விமான டிக்கெட் விலையில் மாற்றம்? ஆயில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி.. மோடி அரசு முடிவு
சென்னை: இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிதி நெருக்கடிகளைக் குறைக்கவும், பயணிகளுக்குக் கூடுதல் சுமை ஏற்படாமல் பாதுகாக்கவும் மத்திய அரசு ஒரு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியானது விமான எரிபொருள் (ATF) விலையை முன்னரே கணித்து, அதை ஒரு நிலையான அளவில் வைத்திருக்க உதவும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் நேரடியாக விமான டிக்கெட் விலையைப் பாதிக்கின்றன. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஒருமுறை நிதியுதவி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வட்டி இல்லாத முன்பணமாக வழங்கப்பட உள்ளது. இது விமான நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதல்கள் பற்றி ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளில் விமான எரிபொருள் விலையை நிலைப்படுத்தும் ஆதரவை வழங்குவதற்காக, எண்ணெய் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மிகாத ஒருமுறை நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியுதவியானது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகள் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காற்று மாசுபாட்டை குறைப்பதையும், தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்ட பழைய வாகனங்களை கழிக்கும் 2 ஆண்டு திட்டத்துக்கும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்துக்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியம் நிதி அளிக்கும். சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவை டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
மத்திய அரசிடம் இருந்து ரூ.5,041 கோடியும், பங்கேற்கும் மாநிலங்களிடம் இருந்து ரூ.1,601 கோடி வரிச்சலுகைகள் உள்பட ரூ.9,585 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பி.எஸ்.-4 மற்றும் அதற்கு முந்தைய லாரிகள் மற்றும் பஸ்களுக்கு பதிலாக புதிய மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கிறது.
பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபைக்குழு, மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஹிர்கேடி - ரோஷ்னி - ஆஷாபூர் - ரூதி பிரிவில் (125.01 கி.மீ.) தற்போதுள்ள இடைநிலைச்சாலையை, 2 வழிச்சாலையாக தரம் உயர்த்தவதற்கும், அதே சாலையின் தேஷ்கான் - ஐஸ்வானியா பிரிவில் (108.643 கி.மீ.) தற்போதுள்ள 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கும், கலப்பின ஆண்டுத்தொகை முறையில் ரூ.4,415.60 கோடி நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதுபோல தேசிய நெடுஞ்சாலை-63-ல் தற்போதுள்ள ஆர்முர்-ஜக்டியால்-மஞ்சேரியல் பகுதியை 'ஹைபிரிட் அன்யூட்டி மாடல்' முறையிலும், தேசிய நெடுஞ்சாலை -563-ன் ஜக்டியால்-கரீம்நகர் பகுதியை 'பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர் டோல்' முறையிலும், 190.76 கி.மீ. மொத்த நீளம் மற்றும் ரூ.7597.16 கோடி மொத்த மூலதன செலவில் 3 பணித்தொகுப்புகளின் கீழ் 4 வழிச்சாலையாக அகலப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல பிகாரில் உள்ள ககாரியா-பூர்னியா பகுதியை (143.529 கி.மீ.) ரூ.3,936 கோடி செலவில் சுங்கக்கட்டண முறையில் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஒடிசாவில் ராமேஸ்வரில் இருந்து பரதீப் வரை புதிய கடலோர நெடுஞ்சாலையை கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில் 2 தொகுப்புகளாக அமைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த நீளம் 160.18 கி.மீ. ஆகும். மொத்த மூலதனச் செலவு ரூ.8300.79 கோடி"
இவ்வாறு அவர் கூறினார்.
விமான பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் பலன் என்ன?
எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இந்த ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு மற்றும் சர்வதேசச் செயல்பாடுகளில் எரிபொருள் விலையைச் சீராக வைத்திருக்கப் பயன்படும். இதன் மூலம் பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணம் கட்டுக்கடங்காமல் உயர்வது தடுக்கப்பட வாய்ப்புள்ளது. எரிபொருள் செலவு குறைந்தால், அந்தப் பலன் நேரடியாகப் பயணிகளுக்குக் குறைந்த கட்டணங்கள் மூலம் சென்றடையும் எனக் கருதப்படுகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மூலமாக இந்த நிதி விநியோகிக்கப்படும். இது வெறும் மானியம் அல்லாமல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாய முதலீடாகப் பார்க்கப்படுகிறது. இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ந்து வரும் வேளையில், இத்தகைய நிதி ஊக்கங்கள் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கிய மற்றொரு முக்கிய அம்சம் பழைய வாகனங்களை அப்புறப்படுத்துவது பற்றியது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்று மாசுபாட்டைக் குறைக்க இரண்டு ஆண்டு காலச் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பி.எஸ்.-4 மற்றும் அதற்கும் முந்தைய காலத்து லாரிகள் மற்றும் இதர வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ரூ.9,585 கோடி நிதி வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.5,041 கோடி நிதியுதவி அளிக்கும். மீதமுள்ள தொகை அந்தந்த மாநில அரசுகளின் வரிச் சலுகைகள் மூலம் ஈடு செய்யப்படும். இதன் மூலம் பழைய மாசுப்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாகப் புதிய மின்சார வாகனங்கள் மற்றும் பி.எஸ்.-6 ரக வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications