சமன்வே பாஷா சம்மன் விருதைத் தட்டிச் சென்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்”!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் சர்ச்சைக்குள்ளான எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" என்ற நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நாவலில், திருச்செங்கோடு மக்களின் வாழ்க்கை முறை பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை எழுந்தது. மேலும், அக்கோவில் இறைவன் பற்றியும் தவறாக பதிவிடப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கடும் எதிர்ப்பையடுத்து தனது நாவலில் அந்த ஊரைக் குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்பு கேட்டதுடன், இனி எழுதப்போவதில்லை என்றும் அறிவித்தார். இந்த நிலையில், பெருமாள் முருகனுக்கு சமன்வே பாஷா சம்மன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு அகில இந்திய அளவில் "சமன்வே பாஷா சம்மன்" என்னும் இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் நேற்று நடந்த 4 ஆவது இந்திய மொழிகள் திருவிழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் சச்சின் கேத்கர், மங்கலேஷ் தாப்ரல், மித்ரா புகன், அருந்ததி சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு சமன்வாய் பாஷா விருதுக்கு மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை தேர்வு செய்தது.
நவம்பர் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய மொழிகளுக்கான திருவிழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. சர்ச்சைக்குள்ளான மாதொருபாகன் நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட உள்ள விருது மாபெரும் பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்ட தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள நவீன அங்கீகாரம்." என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications