சிகிச்சைக்கு வந்த பெண்ணை மயக்க ஊசி போட்டு பலாத்கார முயற்சி – ஆயுர்வேத மருத்துவர் சில்மிஷம்!
சென்னை: சென்னை அம்பத்தூரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பெறுவதற்காக அதே பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் சதீஷ்குமாரை போய் பார்த்துள்ளார்.
அங்கு அபிராமிக்கு சதீஷ்குமார் முதல் கட்ட சிகிச்சை அளித்தார். வீடு திரும்பிய அபிராமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அபிராமி நேற்று முன்தினம் மறுபடியும் சதீஷ்குமாரின் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது சதீஷ்குமார் அபிராமிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த அபிராமியை, சதீஷ்குமார் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிய அபிராமி, சம்பவம் குறித்து அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நோயாளி அபிராமியை மயக்கஊசி போட்டு பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் சதீஷ்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications