சிகிச்சைக்கு வந்த பெண்ணை மயக்க ஊசி போட்டு பலாத்கார முயற்சி – ஆயுர்வேத மருத்துவர் சில்மிஷம்!
சென்னை: சென்னை அம்பத்தூரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பெறுவதற்காக அதே பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் சதீஷ்குமாரை போய் பார்த்துள்ளார்.
அங்கு அபிராமிக்கு சதீஷ்குமார் முதல் கட்ட சிகிச்சை அளித்தார். வீடு திரும்பிய அபிராமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அபிராமி நேற்று முன்தினம் மறுபடியும் சதீஷ்குமாரின் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது சதீஷ்குமார் அபிராமிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த அபிராமியை, சதீஷ்குமார் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே மருத்துவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடிய அபிராமி, சம்பவம் குறித்து அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நோயாளி அபிராமியை மயக்கஊசி போட்டு பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் சதீஷ்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications