நில அபகரிப்பு வழக்கு: ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி மனு
மதுரை: நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 19-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திருமங்கலம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரிக்காக விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மு.க.அழகிரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மு.க.அழகிரி மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன்பு தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என அழகிரிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த நிபந்தனையை தளர்த்தக்கோரி மு.க.அழகிரி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், நீதிமன்ற நிபந்தனை அடிப்படையில் கடந்த 13 நாள்களாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறேன். இந்த வழக்கில் என் சார்புடைய விசாரணை முடிந்துவிட்டது. விசாரணையின் போது ஆய்வாளர் தெரிவித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். கால் நகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனவே, ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே. கல்யாணசுந்தரம் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அழகிரி சார்பில் வழக்கறிஞர் மோகன் குமார் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் கே.அன்பரசன் வாதிடும்போது, நில அபகரிப்பு வழக்கை விரைவில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 20 நாளாவது நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவேற்றிய பின்னரே நிபந்தனை தளர்வு கோரி மனு தாக்கல் செய்யலாம்' என்றார். இதையடுத்து, விசாரணையை செப். 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications