செயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலினுக்கு பிபியை எகிற வைக்கும் அழகிரி!
முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனது தந்தையின் நினைவிடத்தில் இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்; அது இப்போது தெரியாது.

பிபியை எகிற வைத்த அழகிரி
கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் உடன்பிறப்புகள் என்னுடன் தான் இருக்கின்றனர். அதற்கு காலம் பதில் சொல்லும் என்றார். அழகிரியின் இந்த பேட்டி ஸ்டாலின் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களின் பிபியையும் எகிற வைத்துள்ளது.

நாளை செயற்குழு
நாளை திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அழகிரி அளித்துள்ள இந்த பேட்டி ஸ்டாலினை பயமுறுத்துவதற்காகவே என கூறப்படுகிறது. திமுகவில் இருந்து அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.

முக்கிய பொறுப்பு
அழகிரி இதுவரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி கட்சியில் தனக்கென முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஸ்டாலினுக்கு அறிவுறுத்தல்
குடும்பத்தினரும் பாஜக, அழகிரியை வளைக்கும் முன்பு கட்சியில் நல்ல பொறுப்பை கொடுத்து அவரை நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஸ்டாலினுக்கு மிரட்டல்?
இந்நிலையில் அழகிரி இன்று அளித்த பேட்டி உண்மை விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாக கூறியிருப்பதால், கட்சியில் முக்கிய பொறுப்பு தராவிட்டால் தனிக்கட்சி தொடங்கிவிடுவேன் என்று ஸ்டாலின் தரப்பை மிரட்டுவதற்காகவே என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications