கோபாலபுரத்தில் தயாளு அம்மாளுடன் மு.க. அழகிரி திடீர் சந்திப்பு!
சென்னை: திமுகவில் நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி திடீரென கோபாலபுரம் போய் அவரது தாயார் தயாளு அம்மாளை சந்தித்துப் பேசியது புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நடைபெறும் நடைபெறும் நிலையில் திமுகவில் இருந்து கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மு.க. அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார். இதை எதிர்த்து தாம் வழக்கு தொடருவேன் என்றும் அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்தார் அழகிரி. அதன் பின்னர் நேற்று மாலை சிந்ததாரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றவுடன் கோபாலபுரம் வீட்டுக்கு அழகிரி சென்றார்.
அங்கு தமது தாயார் தயாளு அம்மாளை அழகிரி சந்தித்துப் பேசினார் .இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது தாயாரிடன் உடல்நலம் குறித்து அழகிரி விசாரித்ததாக தெரிகிறது.
பின்னர் சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு அழகிரி சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications