For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 5 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 5 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையால் அதிசயித்துப் போயுள்ளனர் அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள்.

சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சுதா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் எடை அதிகமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.இதையடுத்து நேற்று சுதாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை 5 கிலோ 200 கிராம் எடை இருந்தது. தாய்-சேய் நலமுடன் உள்ளனர். இந்தியாவில் அதிக எடையுடன் பிறந்த குழந்தையாக இந்த குழந்தை இருக்கலாம் என டாக்டர்கள் கருதுகின்றனர்.

English summary
A new baby was born with 5 kg weight in Chennai yesterday. This child is a first child with heavy weight in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X