பாகுபலியை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம்? கடைசி நேர சிக்கலால் பூனைகுட்டி வெளியே வந்தது!
பாகுபலி திரைப்படத்தை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: பாகுபலி திரைப்படத்தை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம் என கூறப்படுகிறது. பாகுபலி திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் ஏற்பட்ட கடைசிநேர சிக்கலில்தான் இந்த உண்மையே வெளியே வந்தது.
தமிழக முன்னாள் முதல்வரின் குடும்பமே பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்திருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. அவரது குடும்பத்தின் பெரும்பாலான முதலீடுகள் தென்மாவட்டத்தில்தான் இருந்து வருகின்றன.

டெல்லிக்கு நெருக்கம்
கடந்த சில மாதங்களாக டெல்லியுடன் படுநெருக்கமாக இருந்து வருகிறது மாஜி முதல்வர் வகையறாக்கள். கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் மாஜி முதல்வர் தரப்பு 'பெரும்' மகிழ்ச்சியுடனே இருந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

புதிய நிறுவனம்
இந்த நிலையில் பாகுபலி திரைப்படத்தை புதியதாக ஒரு நிறுவனம் திடீரென வாங்கியது. இப்படம் தமிழகத்தில் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

பணச் சிக்கல்
பெருந்தொகையான பணத்தை வங்கியில் உடனே செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டிருந்தது. அப்போது இந்த சிக்கலுக்கு தீர்வு காண, இந்த நிறுவனமே மாஜி முதல்வருக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்பட்டது.

பரபரப்பு
அடடே இப்படி ஒரு விஷயமும் இருக்கிறதா? என நினைத்துக் கொண்ட 'மேலிடம்' நிதி சிக்கலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாம். இப்போது பிரமிக்க வைக்கும் வகையில் அடுத்தடுத்து 10 புதிய படங்களை பெரும் தொகைக்கு வாங்கி வருகிறதாம் கே புரடொக்சன்ஸ். இந்த விவகாரம் இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications