மாடு விற்கத் தடை.. தமிழகத்தில் நாலே நாளில் 100 கோடி நஷ்டம்.. கொதிக்கும் மாட்டு வியாபாரிகள்
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதால், நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாட்டு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பொள்ளாட்சி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலியான மாட்டுச் சந்தை
இந்தப் போராட்டங்கள் ஒருபுறத்தில் படுவேகமாக நடந்து கொண்டிருக்க, மாடு விற்பனைத் தடையால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக மாடு விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மாட்டுச் சந்தைகள் தொடர்ந்து காலியாக கிடப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் ரூ.6 கோடி இழப்பு
இதுகுறித்து பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் மாட்டு வியாபாரிகள் மாநிலச் சங்க செயலாளர் செல்வராஜ் பேசினார். அப்போது, மாடு விற்பனைக்கு தடை விதித்ததால் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் மட்டும் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று செல்வராஜ் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 100 கோடி நஷ்டம்
மேலும், தமிழ்நாடு முழுவதும் மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்கப்படாததால் ரூ.100 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று செல்வராஜ் கூறினார். இதனால் மாடு விற்பனையாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வாபஸ்
மாட்டு வியாபாரம் மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி வியாபாரம் என மாடு தொடர்பான அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நஷ்டத்தை வியாபாரிகளால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மாட்டு வியாபாரிகள் கோரியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications