இதுகூடவா தெரியல.. இந்தியாவை ஆள்வது ஆர்.எஸ்.எஸ்.தான்.. திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு
இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது பாஜக அல்ல; ஆர்.எஸ்.எஸ் என்று விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை; இந்தியாவில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆண்டு கொண்டிருப்பது பாஜக அல்ல என்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்று விசிக தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறியதாவது: இறைச்சிக்கு பாஜக அரசு தடை விதித்திருக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. மத்தியில் பாஜக ஆட்சி நடக்காமல் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆட்சி நடக்கிறது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு சாட்சி.

ஒட்டகம் விற்கக் கூடாது என்று சொல்வதன் மூலம் ஒரு கலாச்சார தாக்குதலை பாஜக அரசு செய்கிறது. மேலும், சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தின் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாஜக முயற்சித்து இந்த வேலையை செய்துள்ளது.
இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications