பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போர்க்கொடி.. அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
அவிநாசி: தமிழக அரசின் புதிய பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் அவிநாசியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது
கடந்த 20ம்தேதி திடீரென பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக தமிழக அரசு உயர்த்தியது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்திலும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
சமூக அமைப்புகள் சார்பாக இந்த கடையடைப்பு நடைபெற்று வருகிறது. காலை 6மணிக்கு தொடங்கப்பட்ட இந்த கடையடைப்பு மாலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று ஏராளமானோர் வசிக்கும் அவிநாசியில் அரசுக்கு எதிராக முதல் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. விரைவில் இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், நகரங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அவிநாசியில் உள்ள சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications