ரெஸ்ட் எடுக்கப் போன பைலட்.. 12 மணி நேரம் லேட்டான கோவை- பெங்களூரு விமானம்; பயணிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை விமான நிலையத்தில் கோவை-பெங்களூரு விமானத்திற்கு விமானி இல்லாததால் 12 மணி நேரம் பயணிகள் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து "ஜெட் ஏர்வேஸ்" நிறுவனத்தின் 80 பேர் பயணிக்கக் கூடிய சிறிய இரக விமானம் ஓன்று நேற்று முன்தினம் இரவு கோவை வந்தது. சென்னையில் இருந்து விமானத்தை ஓட்டி வந்த விமானி தனது பணி நேரம் முடிந்து விட்டது எனக்கூறி தனது ஓய்வு அறைக்குச் சென்று விட்டார்.

Bangalore-kovai Flight 12 hours late because of pilot

இரவு 10 மணிக்கு பெங்களூரு புறப்பட வேண்டிய இந்த விமானத்தை இயக்க மாற்று விமானியும் இல்லாத நிலையில் வேறு வழியில்லாத காரணத்தால் பயணிகள் அனைவரும் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானியின் 12 மணி நேர ஓய்வு முடிந்து விமானி பணிக்கு திரும்பியதை அடுத்து நேற்று மதியம் அந்த விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், "விமான போக்கு வரத்து விதிகளின்படி எட்டு மணி நேரத்துக்கு மேல் விமானி பணி செய்யக்கூடாது. பயணிகள் பாதுகாப்புக்காக இச்சட்டம் மிக கடுமையாக பின்பற்றப்படுகிறது.

இதை மீறி விமானத்தை இயக்கினால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று விமானியின் பணி நேரம் முடிந்ததால் முறைப்படி அவர் 12 மணி நேர ஓய்வுக்கு சென்றுவிட்டார்" எனத் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+