சென்னையில் ஏ.டி.எம்.முக்கு பணம் கொண்டு செல்லும் வாகனத்தை கடத்தி ரூ.15 லட்சம் கொள்ளை
சென்னை: சென்னை மண்ணடியில் ஏ.டி.எம். ஒன்றில் பணம் நிரப்புவதற்காக ரூ.37 லட்சம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை கடத்தி அதிலிருந்து ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மண்ணடியில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் பணம் கொண்டுசெல்லப்பட்டது.

வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே சென்றபோது வேனை மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் வேனில் பாதுகாப்புக்கு சென்ற காவலாளியை தாக்கிவிட்டு பணத்துடன் வேனைக் கடத்திச் சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த வாகனம் ராயபுரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பணம் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளை உடைத்து ரூ.15 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாகனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான பணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வாகனத்தின் ஓட்டுநர் நாராயணன், பாதுகாவலர் சுரேந்தினிடம் வடக்கு கடற்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications