ரூபாய் நோட்டு உத்தரவால் பொருளாதாரத்தில் தாக்கம்.. எந்த துறை வீழும், எந்த துறை வளரும்?

ரூபாய் நோட்டு உத்தரவால் ரியல் எஸ்டேட் துறைக்கு அடி விழும், வங்கித்துறை வளரும் என கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான தடை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பல துறை வல்லுநர்களும் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மொத்த பண புழக்கத்தில், ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 86.4 சதவீத பங்குகளை வகித்தது என்கிறது ரிசர்வ் வங்கி. இதன் மதிப்பு 14 ட்ரில்லியன். கடந்த ஐந்து வருடங்களில்தான் இந்த நோட்டுக்கள் புழக்கம் மிக, மிக அதிகரித்துள்ளதாம்.

Bank deposits will spike: How Rs 500, Rs 1000 note ban will impact economy

இப்படிப்பட்ட நிலையில், அந்த நோட்டுக்கள் மீது தடை விதித்துவிட்டு குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து நோமுரா நிறுவனம் தரப்பில் கூறுகையில், "வங்கிகளில் டெபாசிட் குவியும் என்பதால் இது அத்துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும். குறைந்த வட்டியில் வங்கிகளால் கடன் கொடுக்க முடியும். கிராமப்புறங்களிலும் அனைவரும் இனி வங்கி கணக்கு தொடங்குவார்கள். இது அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க வகை செய்யும். ரியல் எஸ்டேட் தொழிலில் கருப்பு பணம் விளையாடுகிறது. கருப்பு பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டிவரும் நிலை உருவாகியுள்ளதால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் அடி வாங்கும்" என்று கூறினர்.

போபா மெர்ரில் லைன்ஸ் குளோபல் ரிசர்ச் குரூப் தரப்பில் கூறுகையில், "வங்கிகளில் வரலாறு காணாத அளவுக்கு டெபாசிட் கூடும் என்பதால், வங்கிகள் மீதான ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். தங்கத்தின் இறக்குமதி தேவையை ஆர்.பி.ஐ குறைக்கும் என கருதலாம்" என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+