கேரளாவில் தடை செய்யப்பட்ட பாக்கெட் பால் தமிழகத்தில் விற்பனை- ஆட்சியரிடம் பகீர் புகார்
கேரள மாநில அரசு தடை செய்த பாக்கெட் பால் விற்பனை கன்னியாகுமரி மாவட்டத்தில் படு ஜோராக நடந்து வருகிறது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: கேரள அரசு தடை செய்த தனியார் நிறுவனங்களின் பாக்கெட் பால் விற்பனை தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிப்படையாக நடந்துவருகிறது.
கேரள மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பாலினை குமரி மாவட்டத்தில் பெயர் மாற்றி விற்பனை செய்து வரும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக, மாதிரி பால் பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மைக் காலமாக தனியார் பால் நிறுவனங்கள் மீது கடும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சும் அமைந்திருந்தது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்ட பாக்கெட் பாலினை பல தனியார் நிறுவனங்கள் குமரி மாவட்டத்தில் பெயர் மாற்றி விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பால் கெட்டு போகாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைடு, யூரியா உள்ளிட்ட பல்வேறு வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும், இந்த பாலை வாங்கி அருந்துவதால் பலவகையான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தனியார் பால் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பாலினை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்ய வேண்டும், என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புப்பினர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications