தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம்.. தமிழிசை பேச்சு
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 6 வாரம் அவகாசம் அளித்தது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இம்மியளவும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே காவிரி பிரச்னையை தீர்த்துவிடுவோம் என அவர் கூறியுள்ளார்.
தமிழகம், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்திருந்தால் காவிரி பிரச்னை எப்போதோ தீர்ந்திருக்கும் என்றும தமிழிசை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications