சென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம்... சீர்வரிசையா வாழைக்காய், வாழைப்பூ!#valentinesdayprotes
சென்னையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் இந்து முன்னணியினர் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
Recommended Video

சென்னை : காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னையில் பாரத் இந்து முன்னணியினர் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர். மேளதாளத்துடன் சீர் வரிசையாக வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு வைத்து இந்த திருமணத்தை நடத்தினர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த கொண்டாட்டத்திற்கு இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் காதலர் தினம் தேவையா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இன்றைய நாளில் மக்கள் அதிகம்கூடும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று வற்புறுத்துவதையும் இந்து அமைப்பினர் வழக்கமாக வைத்துள்ளனர். காதலர் தின கொண்டாட்டங்களும் அதற்கு எதிர்ப்புகளும் ஆண்டுதோறும் வாடிக்கையானதாகிவிட்டது.
இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இன்று சூளைமேட்டில் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த திருமணத்திற்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையாக வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தன.
நாய்க்கும் கழுதைக்கும் கழுத்தில் பூமாலை போட்டு இரண்டிற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 14ல் காதல் என்ற பெயரில் காமமான காதலும் கள்ளக்காதலையும் கண்டித்து இந்த திருமணம் என பாரத் இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
உண்மைக் காதலை போற்றிடுவோம், அதே சமயம் இந்து கலாச்சாரத்தையும் காத்திடுவோம் என்றும் அவர்கள் அச்சடித்து துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications