பாரதியார் பல்கலை. துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிறையிலடைப்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிற்காக துணைவேந்தர் கணபதி மற்றும் வேதியல் துறைத்தலைவர் தலைவர் தர்மராஜ் ஆகியோரை லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
துணைவேந்தர் மற்றும் அவருக்கு உதவிய பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பதவி நியமனத்திற்கு பணம் கேட்டதாக எழுந்த புகாரில் பேரில் பதினோரு மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின்னர் இருவரும் கைதாகினர். அவர்கள் பிப்.16 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரதியார் பல்கலையில் வேதியல் துறையில் பயிற்சி காலத்தில் இருந்த சுரேஷை உதவி பேராசிரியராக , பணி நியமனம் செய்வதற்கு துணைவேந்தர் கணபதி ரூ.30 லஞ்சம் கேட்டதாகவும், அவருக்கு வேதியல் துறை பேராசியர் தர்மராஜ் இடைத்தரகராக செயல்பட்டதாகவும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது என லஞ்சஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- அரசியலில் நிலவும் ஊழல் கல்வித் துறையையும் சீர்குலைத்துள்ளதா?
- பாரதியார் பல்கலை. துணைவேந்தர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு
மேலும் விசாரணை அதிகாரிகள் துணை வேந்தரின் இல்லத்திற்கு நுழையும் சமயத்தில் அவர் 28 புதிய ரூ.2,000 நோட்டுகளை கிழித்து கழிவறையில் போட்டதும் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் கழிவறையில் இருந்த பணத்தை எடுத்ததோடு, தண்ணீர் தொட்டி மற்றும் கழிவுநீர் தொட்டிகளையும் சோதனை செய்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில் துணைவேந்தராகப் பணியில் சேருவதற்கு முன்னர் கணபதி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிர்தொழில்நுட்பத் துறையின் தலைவராக பணிபுரிந்தார். கடந்த மார்ச் 2016ல் துணைவேந்தராக பதவிஏற்றுக்கொண்டது முதல் தற்போதுவரை, கணபதி மீது எழுந்த புகார்களின் தொடர்ச்சியாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
விசாரணை முடிந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச்சென்ற சமயத்தில் ஊடகத்தினரிடம் பேசிய கணபதி அவர் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் வெளியூரில் இருந்து வந்து பணிக்கு சேர்ந்துள்ளதால், அவருக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்பட்ட சதிதான் இந்த வழக்கு என்று தெரிவித்தார்.
புகார் அளித்த உதவி பேராசிரியர் சுரேஷை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
பிற செய்திகள்:
- ரஷ்யாவுக்கு எதிராக அணு குண்டு செய்யலாம்: அமெரிக்க ராணுவம் ஆலோசனை
- புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது?
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- தடைகளை மீறி 200 மில்லியன் டாலர் சம்பாதித்த வடகொரியா: ஐ.நா. அறிக்கை
- சேனிடரி நேப்கினுடன் புகைப்படம்: தமிழரின் சவாலை ஏற்ற பாலிவுட் பிரபலங்கள்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications