அன்று ஸ்வாதி.. இன்று பவானி.. இன்னும் எத்தனை அப்பாவிகள் சாகப் போகிறார்கள்... குமுறும் உறவினர்கள்!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற அப்பாவிப் பெண் பலியானார். இன்று கணவர், இரு குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த எங்களது பவானியை இழந்து நிற்கிறோம். இப்படிப்பட்ட கொடும் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுட்டுத் தள்ள வேண்டும் என்று பவானியின் உறவினர்கள் குமுறியுள்ளனர்.
பவானியின் மரணம் அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. பவானியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேதனையில் உள்ளனர்.
பவானியின் உடல் சென்னை வந்து சேர்ந்த நிலையில் அவரது உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு
பவானி - பாலன் தம்பதியின் சொந்த ஊர் காரைக்குடியாகும். சென்னையில் டயர் கடை நடத்தி வருகிறார் பாலன். அண்ணா சாலையை ஒட்டியுள்ள பார்டர் தோட்டம் பகுதியில் இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இரு பிள்ளைகள்
பாலன் - பவானி தம்பதிக்கு 14 வயதில் பரத் என்ற மகனும், 11 வயதில் லட்சுமி தேவி என்ற மகளும் உள்ளனர்.

பிள்ளைகள் மீது கொள்ளைப் பாசம்
பவானி, தனது இரு பிள்ளைகளிடமும் கொள்ளைப் பாசம் வைத்திருந்தார். பிள்ளைகள் இருவரும் நன்றாகப் படித்து சமூகத்தில் மிகப் பெரியவர்களாக நடமாட வேண்டும் என்று ஆசை ஆசையாக கூறி வருவாராம்.

மகனை கால்பந்து வீரராக்க ஆர்வம்
அதிலும் தனது மகனை சிறந்த கால்பந்து வீரராக மாற்ற வேண்டும் என்று சபதமே செய்திருந்தாராம். காரணம், பவானிக்கு கால்பந்து விளையாட்டு என்றால் உயிராம். தனது தாயின் ஆசைக்கேற்ப மகன் பரத்தும் கால்பந்தில் நாட்டம் கொண்டவராக வளர்ந்து வருகிறார்.

நடுத்தரக் குடும்பம்
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பவானி - பாலன் தம்பதியினர் மிகவும் அன்பானவர்கள். அமைதியானவர்களாம். அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகுவாராம் பவானி.

உறவினர்கள் குமுறல்
பவானியின் மரணம் அவரது குடும்பத்தையும், உறவினர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், பாலன் - பவானி தம்பதி, இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பவானி இறந்த செய்தி, எங்கள் மனதில் இடிபோல் இறங்கிவிட்டது. சென்னை சென்ட்ரலில் ஸ்ருதி, பெங்களூரில் பவானி என, அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாதிகளை போலீசார் சுட்டு தள்ள வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications