கோவை அருகே காட்டெருமை பலி.. மின்சார கம்பி பட்டு தூக்கி வீசப்பட்ட பரிதாபம்
மின்கம்பி பட்டு காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கோவை அருகே காட்டெருமை பலி-வீடியோ
கோவை: கோவையில் வனத்தை ஒட்டிய பகுதியில் தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பி பட்டு காட்டெருமை தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தது.
கோவை மாங்கரை அடுத்த தூமனூர் சாலையில் அருகிலுள்ள மலை கிராமத்திற்கு செல்லும் மின்சார கம்பியின் வயர் காற்றினால் தாழ்வாக சென்றுள்ளது.

அப்போது, அந்த வழியாக 10 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி பட்டதும், காட்டெருமை தூக்கி வீசப்பட்டது. இதில், மேட்டில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை வடக்கு சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மின் வயர்களை சரி செய்யும் பணிகளிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications