நாளை பாஜகவின் 2வது வே்ட்பாளர் பட்டியல் ரிலீஸ்- பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: பாஜக சார்பில் போட்டியிடும் 2வது வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அது அறிவித்து விட்டது.
வேலூர் மற்றும் தஞ்சாவூர் வேட்பாளர்களை மட்டும் அது அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில், நாளை அந்த இரு பெயர்களும் வெளியிடப்படும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தனக்கு ஆதரவு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டபோது பொன். ராதாகிருஷ்ணன் இதுகுறித்துக் கூறுகையில், பாஜக இரண்டாவது வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும்.
272 மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெறும் . கூடங்குளம் பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றார்.
இதற்கிடையே, மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி கட்சிகளோடு பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர்கள் விரைவில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் பாஜக அணியே முதல் அணி என்று தெரிவித்தார்.