தமிழகம்: கருத்து கணிப்பில் 5வது இடத்துக்கு மல்லுகட்டும் பா.ஜ.க.- காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் திமுகவும் சம பலத்துடன் இருப்பதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வுக் குழுவின் கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் தமிழகத்தில் 5-வது இடத்துக்கு கடுமையாக மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன.

சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் குழுவினர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

BJP and Congress fight for fifth place in TN

இதில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க 37.7% பேரும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க 35.7% பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் தற்போது தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு 33.3%; திமுகவுக்கு 33.1%பேரும் வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த 2 கட்சிகளுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் தேமுதிகவுக்கு 6 %, 4வது இடத்தில் பாமகவுக்கு 3.2% ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-வது இடத்துக்குதான் தேசிய கட்சிகளான மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மல்லுக்கட்டு நடைபெறுகிறது. அதாவது பாஜகவுக்கு 2% பேரும் காங்கிரஸுக்கு 1.8% பேரும் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

அதாவது அதிமுக- திமுகவுக்கு இடையேயான ஆதரவு வித்தியாசம்போலவே பாஜக, காங்கிரஸ் இடையேயான ஆதரவு வித்தியாசமும் 0.2% அளவில்தான் இருக்கிறது. இதனால் தேசிய கட்சிகளான பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தமிழக வாக்காளர்கள் 5-வது இடத்தைத்தான் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+