தமிழகம்: கருத்து கணிப்பில் 5வது இடத்துக்கு மல்லுகட்டும் பா.ஜ.க.- காங்கிரஸ்
சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் திமுகவும் சம பலத்துடன் இருப்பதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வுக் குழுவின் கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் தமிழகத்தில் 5-வது இடத்துக்கு கடுமையாக மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேராசிரியர் ராஜநாயகம் குழுவினர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க 37.7% பேரும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க 35.7% பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் தற்போது தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு 33.3%; திமுகவுக்கு 33.1%பேரும் வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த 2 கட்சிகளுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் தேமுதிகவுக்கு 6 %, 4வது இடத்தில் பாமகவுக்கு 3.2% ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-வது இடத்துக்குதான் தேசிய கட்சிகளான மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மல்லுக்கட்டு நடைபெறுகிறது. அதாவது பாஜகவுக்கு 2% பேரும் காங்கிரஸுக்கு 1.8% பேரும் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
அதாவது அதிமுக- திமுகவுக்கு இடையேயான ஆதரவு வித்தியாசம்போலவே பாஜக, காங்கிரஸ் இடையேயான ஆதரவு வித்தியாசமும் 0.2% அளவில்தான் இருக்கிறது. இதனால் தேசிய கட்சிகளான பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தமிழக வாக்காளர்கள் 5-வது இடத்தைத்தான் ஒதுக்கி கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications