ஆர்கே நகரில் நோட்டாவிடம் தோற்றுப்போன பாஜக!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவை நோட்டா வீழ்த்தியது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொடக்கம் முதலே பாஜகவுக்குக்கும் நோட்டாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைகள் முடிவில் பாஜகவை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
ஆர்கே நகர் தொகுதிக்கு ஓராண்டுக்கு பின்னர் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 77.5 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை
இந்த வாக்குகளை எண்ணும் பணி சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரனே தொடர்ந்து முன்னிலை வகித்து இறுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

தமிழிசை பிரச்சாரம்
ஆர்கே நகரில் பாஜக சார்பில் கரு நாகராஜன் களமிறங்கினார். அவரை ஆதரித்து பல பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

பணம்கொடுப்பதாக புகார்
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறி ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டையில் சாலைமறியல் போராட்டமெல்லாம் நடத்தினார். தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார்.

பாஜக கடைசி இடத்தில்
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக மிகக்குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் 1368 வாக்குகளை பெற்றார்.

பாஜகவை வீழ்த்திய நோட்டா
ஒரு கட்டத்தில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் பாஜகவை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நோட்டா 5வது இடத்தை பிடித்தது. கரு நாகராஜன் 1368 வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications