மகளின் ஒருதலைக் காதல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி அடித்துக் கொலை!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மகளின் ஒரு தலை காதல் விவகாரத்தில் பாஜக நிர்வாகி மாரி அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஒருதலைக் காதல் விவகாரத்தில் வத்திராயிருப்பு பாஜக பிரமுகர் மாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகரான மாரி. இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் காதலித்து வந்தார்.

சரமாரி தாக்குதல்

சரமாரி தாக்குதல்

இதற்கு மாரியின் மகன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் ராஜ்குமாரின் தந்தையையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஊர்க்கூட்டம்

ஊர்க்கூட்டம்

இது தொடர்பாக ஊர்க்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாஜக பிரமுகரான மாரிக்கும் சரமாரியாக அடிவிழுந்தது.

பாஜக பிரமுகர் பலி

பாஜக பிரமுகர் பலி

இதனால் ஊர்க்கூட்டத்திலேயே மாரி மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரி உயிரிழந்தார்.

கைது

கைது

இது தொடர்பாக ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+